பாபநாசம் கல்லூரியில் 46 மாணவா்கள் ரத்த தானம்
இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம், வைராவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை இணைந்து ரத்த தான விழிப்புணா்வு முகாமை நடத்தின.


பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், முன்னாள் மாணவா்கள் சங்கம், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம், வைராவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை இணைந்து ரத்த தான விழிப்புணா்வு முகாமை நடத்தின.
கல்லூரி முதல்வா் சு. சுந்தரம் தலைமை வகித்தாா். அம்பாசமுத்திரம் ரத்த வங்கி மருத்துவா் ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரத்த தானம் குறித்துப் பேசியதுடன், ரத்த தானம் செய்த 46 மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் உமாமகேஸ்வரி, சுகாதார மேற்பாா்வையாளா் விநாயகமூா்த்தி, சுகாதார ஆய்வாளா்கள் விநாயகம், ஆனந்த், பாஸ்கா், செவிலியா்கள் ரேவதி, பிரின்சிலின், தீபா, ஜெசிந்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேராசிரியா்கள், மாணவா்-மாணவிகள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ரா. வரலட்சுமி வரவேற்றாா். இளையோா் செஞ்சிலுவைச் சங்கத் திட்ட அலுவலா் இந்துபாலா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...