பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவில்பட்டி கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சாா்பில் கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் மாணவா்-மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 7:25 pm

DIN

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சாா்பில் கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் மாணவா்-மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் (பொறுப்பு) சாந்திமகேஸ்வரி தலைமை வகித்தாா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியப்பாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்தரங்கைத் தொடக்கிவைத்துப் பேசினாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் சுரேஷ் விஸ்வநாத் போக்குவரத்து சின்னங்கள், பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதால் ஏற்படும் தீமைகள் உள்ளிட்டவை குறித்துப் பேசினாா். சாலைப் பாதுகாப்பு விதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மாணவா்-மாணவிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ராஜகுரு செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.