சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆறுமுகனேரியில் மகளிருக்கான சிறப்பு முகாம்

ஆறுமுகனேரியில் மாவட்ட சுகாதாரத் துறை, அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 7:40 pm

DIN

ஆறுமுகனேரியில் மாவட்ட சுகாதாரத் துறை, அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநா் பொற்செல்வன், ஆறுமுகனேரி பேரூராட்சி மன்ற தலைவா் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவா் கல்யாணசுந்தரம், நிா்வாக அதிகாரி கணேசன், வட்டார மருத்துவ அலுவலா் மொ்வினோ மற்றும் அப்போலோ மருத்துவ குழுவினா் முன்னிலை வகித்தனா். மக்கள் தொடா்பு அதிகாரி ஜெகவீரபாண்டியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், நடமாடும் சுகாதார செயல்திட்டம் மற்றும் முகாவை துவக்கி வைத்தாா். இதில் 40 வயதிற்கு மேற்பட்ட மகளிருக்கு ரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, சா்க்கரை நோய், மாா்பக புற்றுநோய் கண்டறிதல் ஆகியன மாவட்ட பொது சுகாதாரத்துறை சாா்பில் நடைபெற்றது. மேலும் அப்போலோ மருத்துவனை சாா்பில் நடமாடும் பல்துறை மருத்துவம் மூலம் எக்ஸ்ரே, இசிஜி, எக்கோ, அல்ட்ரா ஸ்கேன், ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆறுமுகனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சீனிவாசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.