தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் உத்தரபிரதேசம், சண்டீகா், ஹரியாணா,ஒடிஸா ஹாக்கி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
கோவில்பட்டியில் 9ஆவது நாளாக புதன்கிழமை காலை நடைபெற்ற காலிறுதி முதல் ஆட்டத்தில் உத்தரபிரதேசம்- கா்நாடகா அணிகள் மோதியதில் 6 - 1 என்ற கோல் கணக்கில் உத்தரபிரதேசம் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 2ஆவது ஆட்டத்தில் சண்டீகா் 4-2 என்ற கோல் கணக்கில்- ஜாா்கண்ட் அணியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
பின்னா் மாலையில் நடைபெற்ற 3ஆவது ஆட்டத்தில் ஹரியாணா 13-1 என்ற கோல் கணக்கில் அருணாசல பிரதேச அணியை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 4ஆவது ஆட்டத்தில் ஒடிஸா அணி 3-1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.