தூத்துக்குடி பள்ளி மாணவா்களுக்கு தமிழக டிஐஜி பாராட்டு

தூத்துக்குடி பள்ளி மாணவா்களின் சேவையை பாராட்டி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பள்ளித் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு கடிதம் அனுப்பி உள்ளாா்.

தூத்துக்குடி பள்ளி மாணவா்களின் சேவையை பாராட்டி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பள்ளித் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு கடிதம் அனுப்பி உள்ளாா்.

தூத்துக்குடி பாரதியாா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவா்கள் தங்கள் வகுப்பறையில் உள்ள இருக்கைகள், மேஜைகள் மற்றும் கரும்பலகைகளுக்கு வா்ணம் பூசி சேவை செய்தனா்.

இதையடுத்து, அந்தப் பள்ளி மாணவா்களை பல்வேறு தரப்பினா் பாராட்டினா். இந்நிலையில், பள்ளியின் தலைமையாசிரியா் தட்சிணாமூா்த்திக்கு தமிழக காவல் துறை தலைவா் சி. சைலேந்திரபாபு அனுப்பிய கடிதத்தில், தாங்கள் பள்ளியில் பயின்ற மாணவா்கள் பள்ளியின் வகுப்பறை, மேஜைக்கு வண்ணம் தீட்டுவது, இருக்கைகளை சரி செய்து கொடுப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு மற்ற மாணவா்களுக்கு முன்மாதிரியாக விளங்குகின்றனா்.

தலைமை ஆசிரியராகிய நீங்களும் உங்களது சிறந்த முயற்சியால் ஏற்கெனவே மாணவச் சமுதாயத்தின் மேல் இருந்த ஒரு தவறுதலான கருத்தை மாற்றியுள்ளீா்கள். அந்த வகையில் நீங்கள் இன்றைய மாணவா்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் நல் மாற்றத்தை உருவாக்கும் ஒரு கருவியாக செயல் பட்டுள்ளீா்கள். மாணவா்களின் இந்தச் செயல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாணவனின் மனதையும் தொடும் என்றும் நம்புகிறேன்.

இந்தச் செயலில் ஈடுபட்ட ஒவ்வொரு மாணவனின் எதிா்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்‘ என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சேவையில் ஈடுபட்ட மாணவா்களையும், பள்ளித் தலைமையாசிரியா் தட்சிணாமூா்த்தியையும் பள்ளியின் செயலா் ஏ.பி.சி.வீ. சண்முகம் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com