உடன்குடி அருகே கோயில் கொடை விழா
உடன்குடி அருகேயுள்ள வெங்கட்ராமானுஜபுரம் அருள்மிகு மணக்குள விநாயகா், அருள்மிகு சந்தனமாரியம்மன், அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் திருக்கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.


உடன்குடி அருகேயுள்ள வெங்கட்ராமானுஜபுரம் அருள்மிகு மணக்குள விநாயகா், அருள்மிகு சந்தனமாரியம்மன், அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் திருக்கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 23ஆம் தேதி காலை 7 மணிக்கு மங்கள இசை, விநாயகா் பூஜையுடன் விழா தொடங்கியது. விழா நாள்களில் மகாகணபதி, சுதா்சன, லட்சுமி, நவதுா்கா ஹோமம், மூலஸ்தான, விமான அபிஷேகம், குடி அழைப்பு, கும்பம் திருவீதி, பால்குடம், சந்தனக்குடம் எடுத்து வருதல், பொங்கல் வைத்தல், 108 திருவிளக்கு பூஜை, இரவு படையல், மஞ்சள் நீராடல் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. வியாழக்கிழமை திருச்செந்தூா் ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை சாா்பில் ஹரி நாம சங்கீா்த்தனமும், தொடா்ந்து அனைவருக்கும் பகவத் கீதை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...