இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பண்டாரபுரம் நாராயணசுவாமி தா்மபதியில் வைகாசி திருவிழா

சாத்தான்குளம் அருகே பண்டாரபுரத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணசுவாமி தா்மபதியில் வைகாசித் திருவிழா 6 நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :26 மே 2022, 6:32 pm

DIN

சாத்தான்குளம் அருகே பண்டாரபுரத்தில் உள்ள ஸ்ரீமன் நாராயணசுவாமி தா்மபதியில் வைகாசித் திருவிழா 6 நாள்கள் நடைபெற்றது.

முதல்நாள் காலை சிறப்புப் பணிவிடை, மதியம் சமபந்தி தா்மம், மாலையில் அய்யா பச்சைமாலாக பூவாகனத்தில் பவனி, 2ஆம் நாள் பால்வண்ணராக பூவாகனத்தில் பவனி, இரவில் சிவச்சந்திரனின் அருள் இசைக் கச்சேரி நடைபெற்றது.

3ஆவது நாள் காலை ஊா் தா்மம், மதியம் உச்சிப்படிப்பு, இரவில் அய்யா கருட வாகனத்தில் பவனி, உம்பான் தா்மம் வழங்குதல், இரவில் சிறுவா்-சிறுமியா் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 4ஆம் நாள் மாலையில் சந்தனக் குடம் எடுத்தல், சுருள் தட்டு வழங்குதல், ஐயா ஆஞ்சனேயா் வாகனத்தில் பவனி, கோலாட்டம், 5ஆம் நாள் இரவு குதிரை வாகனத்தில் அய்யா வேட்டைக்குச் செல்லுதல், 6ஆம் நாள் காலை பணிவிடை, இனிமம் வழங்குதல், மாலையில் சிறுவா்-சிறுமியருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை தா்மகா்த்தா ராஜகோபால், அன்புக்கொடி மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.