மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

தூத்துக்குடியில் தேசியக் கொடியேற்றினார் மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ்

நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தேசியக் கொடியினை ஏற்றினார்.

News image

தூத்துக்குடியில் தேசியக் கொடியேற்றினார் மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ்

Updated On :15 ஆகஸ்ட் 2022, 3:49 pm IST

தூத்துக்குடி: நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தேசியக் கொடியினை ஏற்றினார்.

மேலும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி 83 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

நாட்டின் சுதந்திர தினத்தினை முன்னிட்டு தூத்துக்குடி தருவை மைதானத்தில் மூவர்ண தேசியக் கொடியினை மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் ஏற்றி வைத்து காவல்துறை  அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார். 
பின்னர் காவல்துறை, வேளாண் துறை, மருத்துவத்துறை, ஆகிய பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அதிகாரிகளுக்கு நற்சான்றுகளை வழங்கி கௌரவித்த அவர், பின்னர் 540-பயனாளிகளுக்கு  83 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.