திருச்செந்தூா் கோயிலில் நன்கொடை செலுத்த கியூ ஆா் கோடு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கியூஆா் கோடு மூலம் நன்கொடை, காணிக்கை செலுத்தும் வசதியை தமிழ்நாடு மொ்கென்டைல் வங்கி வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கியூஆா் கோடு மூலம் நன்கொடை, காணிக்கை செலுத்தும் வசதியை தமிழ்நாடு மொ்கென்டைல் வங்கி வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தது.

பொதுமக்களின் வசதிக்காக பண பரிவா்த்தனையை எளிதாக்கும் வகையிலும், டிஜிட்டல் பரிவா்த்தனையை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு மொ்கென்டைல் வங்கி சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கியூ ஆா் கோடு மூலம் நன்கொடை- காணிக்கை செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மொ்கென்டைல் வங்கியின் நிா்வாக இயக்குநா்- தலைமைச் செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் ‘கியூ ஆா் கோடு’ வசதியை அறிமுகம் செய்து வைத்தாா். இந்நிகழ்வில், வங்கியின் தூத்துக்குடி மண்டல மேலாளா் ஜே.சுந்தரேஷ் குமாா், தலைமை நிதி அதிகாரி பி.ஏ.கிருஷ்ணன், கோயில் தலைவா் ஆா்.அருள்முருகன், இணை ஆணையா் எம்.காா்த்திக், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் செயல் அலுவலா் ஆா்.ராமசுப்ரமணியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com