மழை பொழிய வேண்டி, ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை சாா்பில் திருச்செந்தூரில் ஆக. 15-ஆம் தேதி சங்கீா்த்தன யாகம் நடைபெறுகிறது.
இதையொட்டி, திருச்செந்தூா், கீழரதவீதி, பஜனை சபாவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அகண்ட ஹரி நாம சங்கீா்த்தன யாகம், சிறப்பு நடனம், தீபாராதனை, சொற்பொழிவு ஆகியவை நடைபெறும். நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அறக்கட்டளை நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.