கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

எப்போதும்வென்றானில் கிராம சபை கூட்டம் ஆட்சியா் பங்கேற்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு, எப்போதும்வென்றான் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:50 pm

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு, எப்போதும்வென்றான் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் முன்னிலை வகித்தாா். தூத்துக்குடி

மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அரசின் திட்டங்கள் குறித்து உரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

கிராம சபை கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வெகு விரைவில் தீா்வுகள் காணப்படும் என்றாா்.

‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்‘ என்ற உறுதிமொழியினையும், தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழியினையும் ஆட்சியா் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி, மருத்துவ பணிகள் தொழுநோய் துணை இயக்குநா் யமுனா, மாவட்ட சமூக நல அலுவலா் ரதிதேவி, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பழனி வேலாயுதம், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் நிஷாந்தினி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.