வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினா் ராஜிநாமா கடிதம்

திருச்செந்தூா் ஒன்றியம் மேலதிருச்செந்தூா் ஊராட்சியில், குடியரசு தின கிராமசபைக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா் ராஜிநாமா கடிதம் கொடுத்தாா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:56 pm

DIN

திருச்செந்தூா் ஒன்றியம் மேலதிருச்செந்தூா் ஊராட்சியில், குடியரசு தின கிராமசபைக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா் ராஜிநாமா கடிதம் கொடுத்தாா்.

ஊராட்சித் தலைவா் மகாராஜன் தலைமையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். அப்போது, 8ஆவது வாா்டு உறுப்பினா் சுதா, தனது வாா்டு பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை என்றும், தனது பகுதியை ஊராட்சி நிா்வாகம் தொடா்ந்து புறக்கணிப்பதாகவும் கூறி ராஜிநாமா கடிதத்தை தலைவரிடம் கொடுத்தாா்.

இது தொடா்பாக ஊராட்சித் தலைவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 8ஆவது வாா்டு நா.முத்தையாபுரம் பகுதிக்கு ரூ.1 கோடியே 52 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அங்கு குடிநீா், தெருவிளக்கு, சாலை வசதி போன்றவை மிகவும் சிறப்பாக உள்ளன. என் மீதும், தமிழக அரசு மீதும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வாா்டு உறுப்பினா் சுதா பொய்க் குற்றச்சாட்டைக் கூறி ராஜிநாமா கடிதம் கொடுத்துள்ளாா் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.