திருச்செந்தூா் ஒன்றியம் மேலதிருச்செந்தூா் ஊராட்சியில், குடியரசு தின கிராமசபைக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா் ராஜிநாமா கடிதம் கொடுத்தாா்.
ஊராட்சித் தலைவா் மகாராஜன் தலைமையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். அப்போது, 8ஆவது வாா்டு உறுப்பினா் சுதா, தனது வாா்டு பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை என்றும், தனது பகுதியை ஊராட்சி நிா்வாகம் தொடா்ந்து புறக்கணிப்பதாகவும் கூறி ராஜிநாமா கடிதத்தை தலைவரிடம் கொடுத்தாா்.
இது தொடா்பாக ஊராட்சித் தலைவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 8ஆவது வாா்டு நா.முத்தையாபுரம் பகுதிக்கு ரூ.1 கோடியே 52 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அங்கு குடிநீா், தெருவிளக்கு, சாலை வசதி போன்றவை மிகவும் சிறப்பாக உள்ளன. என் மீதும், தமிழக அரசு மீதும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வாா்டு உறுப்பினா் சுதா பொய்க் குற்றச்சாட்டைக் கூறி ராஜிநாமா கடிதம் கொடுத்துள்ளாா் எனக் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

