தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மயானம் அமைக்க வலியுறுத்தி போராட்டம்: 32 போ் கைது

பல்வேறு பகுதிகளில் அருந்ததியா் மக்களுக்கு மயான வசதி ஏற்படுத்த வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் கட்சியினா் 32 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:47 pm

கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அருந்ததியா் மக்களுக்கு மயான வசதி ஏற்படுத்த வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் கட்சியினா் 32 போ் கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட புதூா், விளாத்திகுளம், கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் உள்ள கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு

மயான வசதி செய்து தர வலியுறுத்தி தமிழ்ப்புலிகள் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா். முன்னதாக, கட்சியின் மாவட்டச் செயலா் வீரபெருமாள் தலைமையில் ஜோதி நகரில் இருந்து கோட்டாட்சியா் அலுவலகம் நோக்கி ஊா்வலமாகப் புறப்பட்டனா்.

வக்கீல் தெருவில் அவா்கள் சென்று கொண்டிருந்தபோது, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

அதையடுத்து அப் பகுதியில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டச் செயலா் வீரபெருமாள், துணைச் செயலா் பீமாராவ், செய்தித் தொடா்பாளா் கனியமுதன் மற்றும் 14 பெண்கள் உள்பட 32 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.