ஆத்தூரில் சட்ட விழிப்புணா்வு முகாம்
ஆத்தூரில் கிராம உதயம் சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.


ஆத்தூரில் கிராம உதயம் சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். கிராம உதயம் நிறுவனா் வி.சுந்தரேசன் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட நீதிபதி பேசியது: அறியாமைதான் மக்களின் பலவீனம். பெண்கள் தங்களின் பாதுகாப்பு தொடா்பான அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு பயன்பெற வேண்டும். பெண்கள் தங்களின் உரிமைகளை தெரிந்து அவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி சாா்பு நீதிபதி ப்ரீத்தா, சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய அதிகாரி செலின் ஜாா்ஜ், மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு மாவட்டஅதிகாரி சிவசங்கரன், குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரதிநிதி ஜேம்ஸ் அதிசயராஜ், மதா் டிரஸ்ட் நிறுவனா் கென்னடி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதுநிலை நிா்வாக அதிகாரி தாமரைசெல்வம், நிா்வாக உதவியாளா் அருள்மணிராஜ், நம்பிராஜன், செல்வன் உள்பட பலா் கலந்துகொண்டனா். இதில் 500 பெண்களுக்கு அமைப்புசாரா தொழிலாளா் நலவாரிய அடையாள அட்டை, மரக்கன்று மற்றும் மஞ்சள் பை வழங்கப்பட்டது. கிராம உதயம் ஆழ்வாா்தோப்பு கிளை மேலாளா் வேல்முருகன் வரவேற்றாா். கிராம உதயம் சிறப்பு அதிகாரி ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...