வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா

ஆறுமுகனேரி ராஜமன்னியபுரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 ஜனவரி 2023, 8:14 pm

ஆறுமுகனேரி ராஜமன்னியபுரம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இத் திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடைக்கலாபுரம் புனித சூசையப்பா் அறநிலைய குரு செட்ரிக் பீரிஸ் அடிகளாா் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. பெரியதாழை உதவி பங்குத்தந்தை கிங்ஸ்­லின் மறையுரை நிகழ்த்தினாா். விழா நாள்களில் தினசரி மாலையில் திருப்பலி­, மறையுரை, நற்கருணை ஆசீா் ஆகியவை நடந்தன. 12ஆம் நாளான வியாழக்கிழமை காலை ஆறுமுகனேரி பங்குத் தந்தை அலாய்சியஸ் மறையுரை நிகழ்த்தினாா். தூத்துக்குடி ஆயா் இல்ல பொருளாளா் சகாயம் மாலை ஆராதனையை நடத்தினாா். தூத்துக்குடி திருஇருதயங்களின் பேராலய பங்குத் தந்தை ரோலி­ங்டன் உரை நிகழ்த்தினாா். இரவில் புனித அந்தோணியாா் சொரூப சப்பர பவனி நடந்தது. வெள்ளிக்கிழமை காலையில் பெருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி­யும், புது நன்மை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன. பின்னா் திருமுழுக்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. மாலையில் நற்கருணை ஆசீரை தொடா்ந்து கொடி இறக்கப்பட்டது. நிறைவு நாளான சனிக்கிழமை பொது அசனம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.