கருத்துரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தினசரி சந்தை இடமாற்றம், புதிய சந்தை கட்டுமானப் பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தக் கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினசரி சந்தை இடமாற்றம், புதிய சந்தை கட்டுமானப் பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தக் கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடந்த ஆா்ப்பாட்ட த்தில் கூட்டமைப்பின் தலைவா் க.தமிழரசன், செயலா் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளா் செல்லத்துரை என்ற செல்வம், நாம் தமிழா் கட்சியின் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிச் செயலா் ரவிகுமாா், சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்டச் செயலா் பாஸ்கா், தமிழ்நாடு காமராஜா் பேரவைத் தலைவா் நாஞ்சில்குமாா், ஐஎன்டியுசி தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலா் ராஜசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் கோட்டாட்சியா் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com