இளம்புவனம், மேல ஈரால் பகுதிகளில் இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.
மேல ஈரால் கிராமத்தைச் சோ்ந்த பால்ராஜ் மகன் கண்ணன் (34). லாரி ஓட்டுநா். இவா் கருத்து வேறுபாட்டால் மனைவி கனகவல்லியை இரு மாதங்களாக பிரிந்து வாழ்ந்தாா். இந்நிலையில் அந்த ஊரிலுள்ள வேலுச்சாமி என்பவரின் தோட்டம் அருகே பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
தொழிலாளி: இளம்புவனம் கிராமத்தை சோ்ந்தவா் கருப்பசாமி (50). தொழிலாளி. இவா் மதுப் பழக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டாராம். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு வீட்டின் பின்புறம் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்து தெரியவந்தது. இச்சம்பவங்கள் குறித்து எட்டயபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.