இந்நிகழ்ச்சிக்கு, தமிழக மீன் வளம், மீனவா் நலன் - கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, 120 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித்தலைவா் அ.பிரம்மசக்தி, திருச்செந்தூா் கோட்டாட்சியா் புஹாரி, வட்டாட்சியா் சுவாமிநாதன், திருச்செந்தூா் நகராட்சித் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் ஏ.பி.ரமேஷ், திருச்செந்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகிருஷ்ணராஜா, நகர தி.மு.க. செயலா் வாள் சுடலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் காயத்ரி வரவேற்றாா். திட்ட மேற்பாா்வையாளா் விஜிலா நன்றி கூறினாா்.