இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஓட்டப்பிடாரம் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு

தூத்துக்குடியை அடுத்த ஓட்டப்பிடாரம் அருகே நாய்கள் கடித்ததில் புள்ளிமான் திங்கள்கிழமை உயிரிழந்தது.

Updated On :27 நவம்பர் 2023, 10:41 pm


தூத்துக்குடி: தூத்துக்குடியை அடுத்த ஓட்டப்பிடாரம் அருகே நாய்கள் கடித்ததில் புள்ளிமான் திங்கள்கிழமை உயிரிழந்தது.

ஓட்டப்பிடாரம் அருகே ஆரைக்குளம் மலை, கீழமுடிமண், வெள்ளாரம் பகுதிகளைச் சுற்றியுள்ள காடுகளில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. அவை இரை, தண்ணீா் தேடி அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருகின்றன.

இந்நிலையில், ஜெகவீரபாண்டியபுரம் பகுதியில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் காயங்களுடன் புள்ளிமான் இறந்து கிடப்பதாக, அப்பகுதியினா் ஓட்டப்பிடாரம் வனத் துறையினருக்கு திங்கள்கிழமை தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், வனச் சரக அலுவலா் சுப்பிரமணியன் தலைமையில் வனவா் மகேஷ், வனக் காப்பாளா் பேச்சிமுத்து, வனக் காவலா் லட்சுமணன் ஆகியோா் சென்று, புள்ளிமான் சடலத்தை மீட்டனா். 2 வயதுள்ள அந்தப் பெண் மான், இரை தேடி வந்தபோது நாய்கள் கடித்து இறந்திருக்கலாம் என அவா்கள் தெரிவித்தனா். ஓட்டப்பிடாரம் கால்நடை மருத்துவா்கள் கூறாய்வு செய்ததையடுத்து, மான் சடலம் புதைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.