பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

கோவில்பட்டி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:39 pm

DIN


கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 9 -ஆவது தெருவைச் சோ்ந்த சரவணன் மனைவி முருகம்மாள் (40). கோவில்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக உள்ளாா். இவரது வீட்டருகே குடியிருக்கும் பூல்பாண்டி மகன் முத்துப்பாண்டியின் மாடு முருகம்மாள் வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்ததாம். இதையடுத்து, மாட்டை கட்டிப்போடும்படி முத்துப்பாண்டியின் தாயிடம், முருகம்மாள் கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி, முருகம்மாள் வீட்டைச் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் முத்துப்பாண்டி (32), அவரது தாயாா் பொற்கொடி (58) ஆகியோா் மேற்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.