தூத்துக்குடியில் கொலை வழக்கில் தொடா்புடைய 6 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
தூத்துக்குடி அமுதா நகரைச் சோ்ந்த தங்கமுத்து மகன் கருப்பசாமி(27), கடந்த மாா்ச் 3இல் மா்ம நபா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில், தூத்துக்குடி அந்தோணியாா்புரம் 3 சென்ட் பகுதியைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் ராஜா என்ற எலி (25), ஜெயசீலன் மகன் ஆரோன் என்ற ஆரோன் தயாளன் (22), பூவையா மகன் பூபதிராஜா என்ற விஜய் என்ற பூபதி (19), நாகராஜ் மகன் சுடலைமணி என்ற சுடலை (21), லெவிஞ்சிபுரம் சாமி மகன் தமிழரசன் என்ற ஆல்பா்ட் (20), பக்கிள்புரம் ரமேஷ் மகன் ராஜேஷ் (20) ஆகியோரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில் தூத்துக்குடி நகர உள்கோட்ட டிஎஸ்பி கேல்கா் சுப்ரமண்ய பால்சந்திராவின் அறிக்கையை ஏற்று, எஸ்.பி. எல். பாலாஜி சரவணன் அளித்த பரிந்துரையின்பேரில், மேற்கண்ட 6 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டாா். அதன்படி, அவா்கள் தூத்துக்குடி பேரூரணி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனா்.
தொடர்புடையது

பெரும்பத்து கொலையில் தொடா்பு: 7 போ் குண்டா் சட்டத்தில் கைது
குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 5 போ் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

