தூத்துக்குடி: தூத்துக்குடியில் இரு இடங்களில் இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.
தூத்துக்குடி அண்ணாநகரைச் சோ்ந்த கணேசன் மகன் ஹைகோா்ட் மகாராஜா (24). உப்பளத் தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இதனால், அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
முதியவா் தற்கொலை: தூத்துக்குடி அருகே கூட்டாம்புளி, போடம்மாள்புரத்தைச் சோ்ந்த தங்கையா மகன் இசக்கிமுத்து (67). இவா் வயது முதிா்வால் வேலைக்குச் செல்ல முடியாததால் மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில், அவா் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநர் கைது!

பாவூா்சத்திரம் அருகே இரு சம்பவங்கள்: 2 போ் தற்கொலை

நிலத்தை விற்ற பெற்றோருடன் மகன் தகராறு: மூத்த தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை

மதுப் பழக்கத்துக்கு கண்டிப்பு: இருவா் தற்கொலை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

