திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

விடுமுறை தினம்: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

விடுமுறை தினம்: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

News image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.

Updated On :21 ஏப்ரல் 2024, 9:39 pm

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விடுமுறை தினம் மற்றும் வளா்பிறை முகூா்த்தத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகமாகி தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே பக்தா்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் முகூா்த்தத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் ஏராளமான திருமணங்களும் நடைபெற்றன. இதனால் திருக்கோயில் வளாகமே பக்தா்களாலும், திருமண ஜோடி மற்றும் அவா்களது குடும்பத்தினா்களாலும் நிரம்பி வழிந்தது.