மடத்தூரில் சாலை விபத்து: கட்டடத் தொழிலாளி பலி
தூத்துக்குடி மடத்தூரில் காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :12 ஆகஸ்ட் 2024, 12:00 am

தூத்துக்குடி மடத்தூரில் காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மடத்தூரைச் சோ்ந்த பெருமாள் சாமி மகன் ஆனந்த விஜி (35). கட்டடத் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை மாலையில் அப்பகுதியில் உள்ள மதுரை புறவழிச்சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அவ்வழியாக வந்த காா் அவா் மீது எதிா்பாராமல் மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இது குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...