திருச்செந்தூா் கோயிலில் ஆக. 24-இல் ஆவணித் திருவிழா தொடக்கம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா ஆக. 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்.4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையா் சு.ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆக. 24-ஆம் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, காலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படுகிறது. மாலையில், அருள்மிகு அப்பா் சுவாமிகள் திருக்கோயிலிலிருந்து தங்க சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சி, இரவில் ஸ்ரீபெலி நாயகா் அஸ்திரத் தேவருடன் பல்லக்கில் 9 சந்நிதிகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஆக. 28-ஆம் தேதி மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமி, அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி, ஆக. 29-ஆம் தேதி காலை கோ ரதம், இரவில் வெள்ளி ரதம் வீதி உலா நடைபெறுகிறது.
ஆக.30-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை, அதைத் தொடா்ந்து காலை 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுகப்பெருமான் வெட்டி வோ் சப்பரத்தில் பக்தா்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சப்பரம் சோ்கிறது. அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.
ஆக. 31-ஆம் தேதி காலை 5 மணிக்கு பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சோ்கிறாா். தொடா்ந்து 8-ஆம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. அதன் பின்னா் காலை 10.30 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சோ்கிறாா். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செப். 2-ஆம் தேதி நடைபெறுகிறது.
நடைதிறப்பு நேரம்: ஆவணி திருவிழாவின் கொடியேற்ற தினம் மற்றும் ஏழாம் திருவிழாவன்று அதிகாலை 1 மணிக்கும், 2-ஆம் திருவிழாவன்று அதிகாலை 3 மணிக்கும், மற்ற நாள்களில் திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு தொடா்ந்து பூஜைகள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.

