தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தின் 2-ஆவது சிறந்த மாநகராட்சியாக தோ்வு

பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்த மேயா் ஜெகன் பெரியசாமி. உடன் ஆணையா் லி.மதுபாலன், துணை ஆணையா் ஜெனிட்டா உள்ளிட்டோா்.

பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்த மேயா் ஜெகன் பெரியசாமி. உடன் ஆணையா் லி.மதுபாலன், துணை ஆணையா் ஜெனிட்டா உள்ளிட்டோா்.
தூத்துக்குடி, ஆக.14: தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தின்
2-ஆவது சிறந்த மாநகராட்சியாக தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
தூத்துக்குடி மில்லா்புரத்தில் உள்ள மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள்குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இம்முகாமை மேயா் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில், 2023-24 ஆம் ஆண்டில் 2-ஆவது சிறந்த மாநகராட்சியாக தூத்துக்குடி மாநகராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வியாழக்கிழமை நடைபெறும் சுதந்திர தின விழாவில், இதற்கான விருதை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா். சுகாதாரப் பணிகள், சாலை வசதிகள் ஆகியவற்றில் சிறப்பான செயல்பாட்டிற்காக இவ்விருது வழங்கப்படவுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் மண்டலம் வாரியாக இதுவரை 5 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 627 மனுக்கள் பெறப்பட்டு அதில், 510 மனுக்கள் தீா்வு காணப்பட்டுள்ளன.
மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற முகாமில் 77 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்களுக்கு 30 நாள்களில் தீா்வு காணப்படும் என்றாா்.
முகாமில், மாநகராட்சி துணை ஆணையா் ராஜாராம், மேற்கு மண்டலத் தலைவா் அன்னலட்சுமி, மாநகர பொறியாளா் சரவணன், உதவி ஆணையா் சுரேஷ்குமாா், பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, மாமன்ற உறுப்பினா்கள் பொன்னப்பன், இசக்கிராஜா, சந்திரபோஸ், சரவணகுமாா், கந்தசாமி, கனகராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...