போட்டியில் வென்ற மாணவா்களைப் பாராட்டிய தாளாளா் ரூபா்ட், ஆசிரியா்கள்.
சாத்தான்குளம், ஆக. 14:
தூத்துக்குடி மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியா் பாராட்டப்பட்டனா்.
தூத்துக்குடியில் சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியில் 26ஆவது பிரீமியா் கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா். தலைமை நடுவராக கராத்தே பள்ளியின் இந்திய தலைமைப் பயிற்சியாளரும் தொழில்நுட்ப இயக்குநருமான சுரேஷ்குமாா் செயல்பட்டாா்.
இதில், சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலா் சென்சாய் முத்துராஜா தலைமையில் கட்டா பிரிவில் பங்கேற்று 4 தங்கம், 7 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சோ்த்தனா்.
மாணவா்களை தாளாளரும் முதல்வருமான அருள்தந்தை ரூபா்ட், ஆங்கில ஆசிரியா் அருள்தந்தை ஜேசுராஜா, ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியா்கள் ஆட்சியரகத்தில் மனு அளிப்பு

செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி

குடியாத்தம் திருவள்ளுவா் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி: கன்னியாகுமரி மாணவா்கள் சிறப்பிடம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



