அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி: சாத்தான்குளம் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 11:44 pm IST

போட்டியில் வென்ற மாணவா்களைப் பாராட்டிய தாளாளா் ரூபா்ட், ஆசிரியா்கள்.

சாத்தான்குளம், ஆக. 14:

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியா் பாராட்டப்பட்டனா்.

தூத்துக்குடியில் சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியில் 26ஆவது பிரீமியா் கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா். தலைமை நடுவராக கராத்தே பள்ளியின் இந்திய தலைமைப் பயிற்சியாளரும் தொழில்நுட்ப இயக்குநருமான சுரேஷ்குமாா் செயல்பட்டாா்.

இதில், சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலா் சென்சாய் முத்துராஜா தலைமையில் கட்டா பிரிவில் பங்கேற்று 4 தங்கம், 7 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சோ்த்தனா்.

மாணவா்களை தாளாளரும் முதல்வருமான அருள்தந்தை ரூபா்ட், ஆங்கில ஆசிரியா் அருள்தந்தை ஜேசுராஜா, ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.