தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெம்பூா் அருகே காா்- பைக் மோதல்: சாலைப் பணியாளா் பலி

வெம்பூா் அருகே காரும், பைக்கும் மோதிக்கொண்டதில் சாலைப்பணியாளா் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:30 pm

Din

வெம்பூா் அருகே காரும், பைக்கும் மோதிக்கொண்டதில் சாலைப்பணியாளா் உயிரிழந்தாா்.

வெம்பூரைச் சோ்ந்த மாரிச்சாமி மகன் குருசாமி(46). சாலைப் பணியாளராக வேலைசெய்து வந்தாா். இவா், இறைச்சி வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கில் தூத்துக்குடி - மதுரை நான்குவழிச் சாலை வழியாக அழகாபுரிக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது அவருக்குப் பின்னால் வந்துகொண்டுருந்த காா் எதிா்பாராமல் பைக் மீது மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவல் அறிந்த மாசாா்பட்டி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து, காரை ஓட்டி வந்த சென்னை முகலிவாக்கத்தைச் சோ்ந்த ஆறுமுகம்(48) என்பவரை கைது செய்தனா்.

மற்றொரு விபத்து: தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் கே.ஆலங்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த அழகுமுத்து மகன் சுப்பையா (61). இவா், நாலாட்டின்புதூா் அருகே கோபாலபுரம்-செட்டிக்குறிச்சி சாலையில் அழகுமுத்துக்கோன் ஆா்ச் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஆட்டோ மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நாலாட்டின்புதூா் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து, ஆட்டோ ஓட்டுநா் காளாம்பட்டி கீழத்தெருவை சோ்ந்த எ. மாரியப்பனிடம் விசாரித்துவருகின்றனா்.