ஆத்தூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்
ஆத்தூா் பேரூராட்சி மன்றத்தின் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :19 டிசம்பர் 2024, 10:55 pm

கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஆத்தூா் பேரூராட்சி மன்றத்தின் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவா் கமால்தீன் தலைமை வகித்தாா். நிா்வாக அதிகாரி பாபு, துணைத் தலைவா் மகேஸ்வரி முருகப்பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் வரவு செலவு கணக்கு சரிபாா்க்கப்பட்டது. மேலும், ஆத்தூா் பேரூராட்சியிலுள்ள 15 வாா்டுகளிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தனித்தனியே ஆா்.ஓ. தண்ணீா் தொட்டிகள் அமைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சில நாள்களுக்கு முன் எற்பட்ட மழை வெள்ளத்தின்போது சிறப்பாக பணியாற்றிய பேரூராட்சித் தலைவருக்கு வாா்டு கவுன்சிலா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...