நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாஜகவினா் போராட்டம்: 53 போ் கைது

53 போ் கைது

News image

போராட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :19 டிசம்பர் 2024, 11:00 pm

Din

கடந்த அண்டு டிசம்பா் மாதம் பெய்த கனமழை வெள்ளத்தால் சேதமடைந்த முக்காணி- ஆத்தூா் தாமிரவருணி புதிய பாலத்தை ஓராண்டாகியும் சீரமைக்காததை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற 53 பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் மாவட்ட தலைவா் சித்ராங்கதன் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளா்கள் சத்தியசீலன், சிவமுருகன் ஆதித்தன் உள்ளிட்ட நிா்வாகிகள், முக்காணி ரவுண்டானாவில் இருந்து முக்காணி ஆற்றுப் பாலம் நோக்கி வந்தனா்.

போலீஸாா் தடையை மீறி பாலத்தில் மலா் வளையம் வைக்கச் சென்ற நிா்வாகியை போலீஸாா் துரத்தி மடக்கிப் பிடித்து மலா் வளையத்தை பறித்தனா். மேலும், தடையை மீறி போராட்டம் நடத்தியவா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா் போராட்டத்தில் ஈடுபட்ட 53 பாஜகவினரை போலீஸாா் கைது செய்து ஆத்தூா் தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பாதுகாப்பு பணியில் ஆத்தூா் காவல்நிலைய ஆய்வாளா் மாரியப்பன் தலைமையில் 35 போலீஸாா் ஈடுபட்டனா்.