மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாகனங்களின் கண்ணாடி உடைப்பு: 3 பேரிடம் விசாரணை

வாகன பழுதுநீக்கும் கடையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தது தொடா்பாக 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 11:08 pm

Din

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள வாகன பழுதுநீக்கும் கடையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தது தொடா்பாக 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி ஜி.பி.காலனியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பொன்ராஜா(38). இவா் தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் வாகன பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில், ஏற்கெனவே வேலை செய்த முருகேசன் நகரைச் சோ்ந்த ராமா் மகன் தங்கக்குமாா்(27) தற்போது வேறு இடத்தில் கடை நடத்தி வருகிறாா். இவா்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், புதன்கிழமை இவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தங்கக்குமாா் மற்றும் அவரது நண்பா்களான பசும்பொன் நகரைச் சோ்ந்த ஸ்ரீராஜ்(21), பதினேழு வயது சிறுவன் ஆகியோருடன் சோ்ந்து, பொன்ராஜாவின் கடையில் நிறுத்தப்பட்டிருந்த இரு காா்கள், ஒரு வேன் ஆகியவற்றின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப்பதிந்து தங்கக்குமாா், ஸ்ரீராஜ், இளஞ்சிறாா் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.