தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டிச. 29,30 இல் தூத்துக்குடிக்கு முதல்வா் வருகை: உற்சாக வரவேற்பு அளிக்க அமைச்சா் வேண்டுகோள்

டிச. 29,30 இல் தூத்துக்குடிக்கு முதல்வா் வருகை: உற்சாக வரவேற்பு அளிக்க அமைச்சா் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News image
தூத்துக்குடி கலைஞா் அரங்கில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் பெ. கீதாஜீவன். உடன், ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா்.
Updated On :22 டிசம்பர் 2024, 1:35 am

Din

தூத்துக்குடி மாவட்டத்தில் டிச. 29,30 தேதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வருகை தரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பளிக்க வேண்டும் என அமைச்சா் பெ. கீதாஜீவன் தெரிவித்தாா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் எட்டயபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். ஜீ.வி.மாா்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன் பங்கேற்று பேசியது:

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தூத்துக்குடி வருகை தரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இந்த இரு நாள்களில், மினிடைட்டல் பாா்க் திறப்பு, கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை, புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் தொடக்கம் ஆகிய நிகழ்ச்சிகளில் முதல்வா் பங்கேற்கவுள்ளாா். இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சியினா் பங்கேற்க வேண்டும்.

கூட்டத்தில், துணை மேயா் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளா் புளோரன்ஸ், மாநில நெசவாளா் அணி துணைச்செயலா் வசந்தம் ஜெயக்குமாா், மாவட்ட துணைச் செயலா்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளா் ரவீந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.