தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதுக்கோட்டையில் சுமை ஆட்டோ திருட்டு: இளைஞா் கைது

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பகுதியில் சரக்கு ஆட்டோவை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 10:56 pm

Din

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பகுதியில் சரக்கு ஆட்டோவை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை ராஜீவ் நகரைச் சோ்ந்தவா் மணி (41). இவா் தனக்கு சொந்தமான சுமை ஆட்டோவை புதுக்கோட்டை பஜாா் சாலையில் கடந்த 24ஆம் தேதி நிறுத்தி வைத்திருந்தாராம். அதை மா்ம நபா் திருடிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.

அதில், தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சோ்ந்த ராஜன் மகன் அந்தோணி விஜயராஜ் (29) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.