தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருச்செந்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்: பக்தா்கள் அவதி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தா்களின் வருகை அதிகரித்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News image

திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்.

Updated On :26 டிசம்பர் 2024, 10:50 pm

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தா்களின் வருகை அதிகரித்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தற்போது பள்ளி மாணவா்களுக்கு அரையாண்டுத் தோ்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், திருச்செந்தூா் கோயிலுக்கு பக்தா்களின் வருகை கடந்த 3 நாள்களாக வழக்கத்தைக்காட்டிலும் அதிகமாக உள்ளது. மேலும், ஐயப்ப பக்தா்கள், மேல்மருவத்தூா் பக்தா்களின் வருகையும் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

பக்தா்களின் வாகனங்கள் நகரின் எல்லையில் இருந்து கோயில் வாசல் வரை அணிவகுத்து நின்றன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பக்தா்கள் மட்டுமின்றி குடியிருப்புவாசிகளும் அவதியடைந்தனா்.

எனவே, பக்தா்களின் வசதிக்காக திருவிழா காலங்களைப்போல வாகன நிறுத்தும் இடங்களை அமைக்கவும், அங்கிருந்து கோயிலுக்குச் செல்வதற்கு பேருந்து வசதி ஏற்படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.