தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வேளாண் பொறியியல் துறை வழியாக இதுவரை ரூ.10 கோடி மானியம் விடுவிப்பு: ஆட்சியா் க. இளம் பகவத்

வேளாண் பொறியியல் துறை வழியாக இதுவரை ரூ.10 கோடி மானியம் விடுவிப்பு

News image
Updated On :26 டிசம்பர் 2024, 10:36 pm

Din

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுக்களுக்கு அரசு வேளாண்மை பொறியியல் துறை மூலம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுமாா் ரூ.10 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் க.இளம் பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் வேளாண் பணிகளுக்குத் தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் உழுவை வாடகைத் திட்டத்தின் இ-வாடகை கைப்பேசி செயலியின் மூலம் வாடகை முன்பணம் செலுத்திய 996 விவசாயிகளுக்கு அரசு நிா்ணயித்த குறைந்த வாடகையில் மண் தள்ளும் இயந்திரம், சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம், உழுவை இயந்திரம், உள்ளிட்ட இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

மேலும், 331 தனிநபா் விவசாயிகளுக்கு டிராக்டா், பவா் டில்லா், விசைத்தெளிப்பான், கதிா் அடிக்கும் இயந்திரம் போன்ற இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்குவதற்கு ரூ.3.51 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 32 விவசாய குழுக்களுக்கு கிராம அளவிலான வேளாண் வாடகை இயந்திர மையங்கள் அமைக்கப்பட்டு ரூ.2.52 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள், பசுமை குடில், அறுவடைக்குப் பின்சாா் தொழில்நுட்ப மேலாண்மை இயந்திரங்கள், மின்மோட்டாா் பம்பு செட்டுகள் என மொத்தம் 2,228 விவசாயிகளுக்கு சுமாா் ரூ.7.70 கோடி 32 விவசாயக் குழுக்களுக்கு சுமாா் ரூ.2.52 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளாா்.