கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புதூரில் சாலையில் சுற்றித்திரிந்த மனநலன் பாதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை மீட்கப்பட்டாா். நாலாட்டின்புதூா் பகுதி தேசிய நான்குவழிச் சாலைப் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க பெண் ஆடைகளின்றி சுற்றித் திரிவதாக கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளைக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், மனநல மருத்துவா் ஜேசுவா ஆகியோரின் ஆலோசனை பெற்று, அந்த அறக்கட்டளையின் தலைவா் தேன்ராஜா தலைமையிலான மீட்புக் குழுவினா்கள் நாலாட்டின்புதூா் போலீஸாா், பொதுமக்கள் உதவியுடன் அந்தப் பெண்ணை சனிக்கிழமை மீட்டு ஆடைகள் அணிவித்தனா். பின்னா், அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், அந்தப் பெண் முடுக்குமீண்டான்பட்டி கிராமத்தில் உள்ள ஆக்டிவ் மைண்ட்ஸ் (பெண்கள்) மனநலக் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

காணாமல்போன மாணவி சடலமாக மீட்பு

கைப்பேசி கோபுரத்தில் ஏறி மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் போராட்டம்

குளத்தில் மூழ்கி மனநலன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பலி
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

