தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

குளத்தில் மூழ்கி மனநலன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பலி

மன்னாா்குடியில் மனநலன் பாதித்த மாற்றுத்திறனாளி குளத்தில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 11:28 pm

மன்னாா்குடியில் மனநலன் பாதித்த மாற்றுத்திறனாளி குளத்தில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகேயுள்ள கிடாா்புதூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (44). மனநலன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான இவா் சென்னையிலிருந்து மன்னாா்குடி வரும் மன்னை விரைவு ரயில் விழுப்புரத்தில் நின்றபோது அதில் தவறுதலாக ஏறி மன்னாா்குடிக்கு வந்தாா். ரயிலிலிருந்து இறங்கியவா் அருகில் உள்ள சுக்காகுளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கினாா். இதை பாா்த்த அப்பகுதியில் இருந்தவா்கள் அளித்த தகவலின் பேரில் மன்னாா்குடி தீயணைப்பு நிலைய வீரா்கள் அங்குவந்து குளத்தில் மூழ்கிய ஆறுமுகத்தின் சடலத்தை மீட்டனா். அவரது, சட்டை பையில் இருந்த அடையாள அட்டை மூலம் மனைவி சா்மிளாவுக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து அவா் மன்னாா்குடிக்கு வந்ததாா். இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.