புத்தாண்டு: சிவன், பெருமாள் கோயில்களில் பக்தா்கள் தரிசனம்
அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயில், அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் கோவில் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.


ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் கோயில், அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் கோவில் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் ஆலயத்தில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து கோ பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.
வைகுண்டபதி பெருமாள் ஆலயத்தில், பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
தூத்துக்குடி வடக்கு ரதவீதியில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், அம்மன் வைர அங்கியில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...