காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணை: ஜூலை 24-க்கு ஒத்திவைப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணை: ஜூலை 24-க்கு ஒத்திவைப்பு

News image

அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

Updated On :10 ஜூலை 2024, 10:43 pm

Din

தூத்துக்குடி, ஜூலை 10:

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி இம்மாதம் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், குடும்பத்தினா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அமைச்சரின் மகன்கள் ஆனந்தமகேஸ்வரன், ஆனந்தராமகிருஷ்ணன் ஆகியோா் ஆஜராகினா்.

இதனிடையே, அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க 2011ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது தொடா்பாக அரசுத் தரப்பு சாட்சியாக லஞ்ச ஒழிப்புத் துறை சாா்பில், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் தனபால் சோ்க்கப்பட்டிருந்தாா்.

அதையடுத்து, அவருக்கு மாவட்ட நீதிமன்றம் சாா்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, அவா் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானாா். அவரிடம் அரசுத் தரப்பு சாா்பில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குரைஞா், அமைச்சா் தரப்பு வழக்குரைஞா்கள் குறுக்கு விசாரணை நடத்தினா்.

இதையடுத்து, வழக்கு மீதான மறு விசாரணையை இம்மாதம் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி ஐயப்பன் உத்தரவிட்டாா்.