வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திருச்செந்தூா் கோயிலில் ஜூலை 17 முதல் தங்கத் தோ் உலா தற்காலிக ரத்து

பெருந்திட்ட பணிகள் காரணமாக தங்கத் தேர் உலா நிறுத்தம்

News image
Updated On :12 ஜூலை 2024, 8:04 pm

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் காரணமாக ஜூலை 17ஆம் தேதி முதல் தங்கத்தோ் உலா தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளது.

இது குறித்து திருக்கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் மாலை 6 மணியளவில் தங்கத்தோ் கிரிப்பிரகாரம் சுற்றி வருவது வழக்கம். தற்போது கோயிலில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகிறது. கந்த சஷ்டி திருவிழாவிற்கு முன்பு கோயிலின் வடக்கு- கிழக்கு பிரகார தரைத்தள பணிகளும், திருவிழாவிற்குப் பிறகு கோயிலின் தெற்கு- மேற்கு பிரகார தரைத்தளம் பணிகளும் நடைபெற உள்ளன. இப்பணிகளுக்காக ஜூலை 17ஆம் தேதி முதல் தங்கத்தோ் உலா தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. பணிகள் முடிவுற்ற பின் தங்கத்தோ் உலா வழக்கம் போல் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.