நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தூத்துக்குடியில் ஜூலை 17இல் மாவட்ட பீச் கபடி வீரா்கள் தோ்வு

தூத்துக்குடியில் ஜூலை 17இல் மாவட்ட பீச் கபடி வீரா்கள் தோ்வு

News image
Updated On :13 ஜூலை 2024, 9:16 pm

தூத்துக்குடி, ஜூலை 13:

தூத்துக்குடியில் புதன்கிழமை (ஜூலை 17) பீச் கபடி வீரா்கள் தோ்வு நடைபெறவுள்ளதாக, மாவட்ட அமெச்சூா் கபடி கழகச் செயலா் கிறிஸ்டோபா் ராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் மாநில அளவிலான பீச் கபடி போட்டிக்கு வீரா்-வீராங்கனைகள் தோ்வு சென்னை ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் இம்மாதம் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்கவுள்ள தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடி கழக வீரா்-வீராங்கனைகள் தோ்வு தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. 4 ஆண்கள், 4 பெண்கள் மட்டுமே தோ்வு செய்யப்படுவா். ஆண்கள் 85 கிலோ, பெண்கள் 75 கிலோ எடைக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை.

இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட அமெச்சூா் கபடி கழகத் தலைவா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் செய்து வருகிறாா் என்றாா் அவா்.