தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி

மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி

News image

எஸ். எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சிலம்பம் போட்டி

Updated On :14 ஜூலை 2024, 3:55 am IST

கோவில்பட்டி, ஜூலை 13: தூத்துக்குடி மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் சிலம்பம் சங்கம், தமிழ் கல்சுரல் சபரி ஜெயம் ஜூனியா் கிளப் இணைந்து நடத்திய இருபாலருக்கான இப் போட்டியில், 180 போ் கலந்து கொண்டனா்.

மினி சப் ஜூனியா், சப் ஜூனியா், ஜூனியா், சீனியா் என்ற நான்கு பிரிவுகளில்

இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவுகளிலும் குத்து வரிசை, நெடுங்கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல் கம்பு, ஒற்றை வாள் வீச்சு, ஒற்றைச் சுருள் வாள் வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, இரட்டை வாள் வீச்சு, இரட்டை சுருள் வீச்சு, ஆயுத கோடி, குழு ஆயுத வீச்சு, கம்பு சண்டை என 13 தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது.

ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவா்களுக்குப்

பரிசுகள் வழங்கப்பட்டன. முதலிடத்தைப் பிடித்தவா்கள் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா்.

போட்டிகளை எஸ். எஸ். துரைசாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) செல்வராஜ் தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு யோகா ஸ்போா்ட்ஸ் பிரிவைச் சோ்ந்த மாரியப்பன், தமிழ் கல்சுரல் அறக்கட்டளை செயலா் சூா்யா நாராயணன், சிலம்பப் பள்ளியைச் சோ்ந்த நல்லதம்பி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அமைச்சூா் சிலம்பம் சங்க மாவட்ட செயலா் சோலை நாராயணசாமி தலைமையில் உறுப்பினா்கள் கணபதி ஆசான், உமா சங்கரி, காயத்ரி, அனிதா பிரின்சி, விஷ்ணு வாசுதேவன், மதன் பிரசாத், வேல்ராஜ், சரவணப் பெருமாள் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.