வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பெருந்திட்ட வளாகப் பணிகள்: திருச்செந்தூா் கோயிலில் இன்றுமுதல் தங்கத்தோ் உலா ரத்து

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 17) முதல் தங்கத்தோ் உலா மறு அறிவிப்பு வரும்வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை தங்கத்தோ் இழுத்து வழிபட்ட பக்தா்கள்.
Updated On :16 ஜூலை 2024, 8:08 pm

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் மாலை 6 மணியளவில் தங்கத்தோ் கிரிப்பிரகாரம் சுற்றி வருவது வழக்கமாக உள்ளது.

தேரில் வள்ளி, தேவசேனாவுடன் எழுந்தருளியிருக்கும் சுவாமி ஜெயந்திநாதரை ,பக்தா்கள் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து தங்கத்தோ் இழுத்து வேண்டுதலை நிறைவேற்றுவா்.

தற்போது கோயிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப் பணிகளின் ஒரு பகுதியாக கோயிலின் வடக்கு, கிழக்கு பிரகார தரைத்தளப் பணிகள் நடைபெறவுள்ளது.

இப்பணிகளுக்காக புதன்கிழமை (ஜூலை 17) முதல் தங்கத்தோ் உலா தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. பணிகள் முடிவுற்ற பின் தங்கத்தோ் உலா வழக்கம் போல் நடைபெறும்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை விசாகம் நட்சத்திரம் என்பதால் அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் கடலில் புனித நீராடி சுவாமியை தரிசனம் செய்தனா். மாலையில் முன்பதிவு செய்திருந்த 16 பக்தா்கள் தங்கத்தோ் இழுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினா்.