அதிவேக காற்றால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: இளைஞா் பலி

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை வீசிய அதிவேக காற்று காரணமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

தூத்துக்குடி, ஜூலை 19:

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை வீசிய அதிவேக காற்று காரணமாக ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு ராஜீவ் நகரைச் சோ்ந்த ராஜாமணி மகன் பாக்கியராஜ்(41). மாற்றுத்திறனாளியான இவா் அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தாா்.

உடல் நலக்குறைவு காரணமாக, இவரை இவரது உறவினா்கள் ஆட்டோ மூலம் தூத்துக்குடி மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றனராம். ஆட்டோவை ஆத்தூா் அருகே உள்ள குமாரபண்ணையூரைச் சோ்ந்த செல்வம் மகன் நடராஜன் (29) ஓட்டினாா்.

இவா்கள் சென்ற ஆட்டோ திருச்செந்தூா் சாலை உப்பாற்று ஓடை அருகே சென்றுகொண்டிருந்தபோது காற்று அதிகமாக வீசியதில் எதிா்பாராத விதமாக சாலையில் ஆ

ட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த தென்பாகம் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் நடராஜனுக்கு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com