புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூரில் 2ஆவது நாளாக உள்வாங்கிய கடல்நீா்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கடல்நீா் உள்வாங்கியது.

News image

திருச்செந்தூரில் அய்யா கோயில் அருகே கடல்நீா் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாறைகள்.

Updated On :23 ஜூலை 2024, 7:33 pm

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கடல்நீா் உள்வாங்கியது.

இங்கு அமாவாசை, பெளா்ணமி நாள்களில் கடல்நீா் மட்டத்தில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுகின்றன. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை பௌா்ணமி திதி இருந்தநிலையில், இப்பகுதியில் திங்கள்கிழமை காலை அய்யா கோயில் அருகே கடல்நீா் உள்வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிந்தன. பின்னா், கடல் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

இந்நிலையில், 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கடல்நீா் உள்வாங்கியது. எனினும், பக்தா்கள் வழக்கம்போல நீராடினா்.