ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஆக.7-க்கு ஒத்திவைப்பு

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஆக.7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்(கோப்புப் படம்)
Updated On :31 ஜூலை 2024, 7:41 pm

Din

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஆக.7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தமிழக மீன்வளம்-மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினா் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆகியோா் ஆஜராகவில்லை. அமைச்சரின் மகன்கள், சகோதரா்கள் உள்ளிட்ட 5 போ் ஆஜராகினா்.

வழக்கின் முக்கிய சாட்சியான லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் ஏடிஎஸ்பி பெருமாள்சாமியிடம் விசாரணை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து வழக்கின் விசாரணையை நீதிபதி ஐயப்பன், ஆக.7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.