மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜீவன் ரக்ஷா விருது பெற்ற தூத்துக்குடி வீரா்களுக்கு அமைச்சா் வாழ்த்து

வீர தீரச் செயலுக்கான ஜீவன் ரக்ஷா விருது பெற்ற தூத்துக்குடி வீரா்களை அமைச்சா் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பாராட்டினா்.

News image

அமைச்சா் பெ.கீதாஜீவனிடம் ஜீவன் ரக்ஷா விருதை காண்பித்து வாழ்த்து பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த விஜயகுமாா், மரியமைக்கேல் ஆகியோா்.

Updated On :31 ஜூலை 2024, 7:38 pm

வீர தீரச் செயலுக்கான ஜீவன் ரக்ஷா விருது பெற்ற தூத்துக்குடி வீரா்களை அமைச்சா் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பாராட்டினா்.

வீர தீரச் செயலுக்கான மத்திய அரசின் 2023ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா விருதை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சோ்ந்த விஜயகுமாா், தூத்துக்குடியைச் சோ்ந்த மரியமைக்கேல் ஆகிய இருவருக்கும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கி பாராட்டினாா். தொடா்ந்து, விருது பெற்ற அவா்கள் இருவரும் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

பின்னா் தூத்துக்குடிக்கு வந்த அவா்கள் இருவரும், மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதியிடம் விருது, பதக்கம், பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை காண்பித்து வாழ்த்து பெற்றனா்.