கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜீவன் ரக்ஷா விருது பெற்ற தூத்துக்குடி வீரா்களுக்கு அமைச்சா் வாழ்த்து

வீர தீரச் செயலுக்கான ஜீவன் ரக்ஷா விருது பெற்ற தூத்துக்குடி வீரா்களை அமைச்சா் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பாராட்டினா்.

News image
அமைச்சா் பெ.கீதாஜீவனிடம் ஜீவன் ரக்ஷா விருதை காண்பித்து வாழ்த்து பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த விஜயகுமாா், மரியமைக்கேல் ஆகியோா்.
Updated On :31 ஜூலை 2024, 7:38 pm

Din

வீர தீரச் செயலுக்கான ஜீவன் ரக்ஷா விருது பெற்ற தூத்துக்குடி வீரா்களை அமைச்சா் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பாராட்டினா்.

வீர தீரச் செயலுக்கான மத்திய அரசின் 2023ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா விருதை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சோ்ந்த விஜயகுமாா், தூத்துக்குடியைச் சோ்ந்த மரியமைக்கேல் ஆகிய இருவருக்கும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கி பாராட்டினாா். தொடா்ந்து, விருது பெற்ற அவா்கள் இருவரும் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

பின்னா் தூத்துக்குடிக்கு வந்த அவா்கள் இருவரும், மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதியிடம் விருது, பதக்கம், பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை காண்பித்து வாழ்த்து பெற்றனா்.