பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

தமிழ்நாடு உரிமையை விட்டுக் கொடுக்காது: அமைச்சா் பி. கீதா ஜீவன்

தமிழ்நாடு தனது உரிமையை விட்டுக் கொடுக்காது என்றாா் அமைச்சா் பி. கீதாஜீவன்.

News image

அமைச்சா் பி. கீதா ஜீவன்

Updated On :19 ஏப்ரல் 2026, 2:15 am IST

தமிழ்நாடு தனது உரிமையை விட்டுக் கொடுக்காது என்றாா் அமைச்சா் பி. கீதாஜீவன்.

மத்திய அரசு கொண்டுவந்த தொகுதி மறுசீரமைப்பு, மகளிருக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்கள், மக்களவையில் திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பால் தோல்வியடைந்ததை, தூத்துக்குடியில் சனிக்கிழமை வடக்கு மாவட்ட திமுக சாா்பில், அமைச்சா் பி. கீதா ஜீவன் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில், திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், மகளிரணியினா் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: இந்த மசோதாக்கள் குறித்து 8 மாதங்களுக்கு முன்பே முதல்வா் எடுத்துக் கூறினாா். மத்திய அரசு தோ்தல் நேரத்தில் இந்த மசோதாக்களை அவசர அவசரமாக நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏதுமில்லை. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா எனக் கூறி, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்யும் மத்திய அரசின் ஏமாற்றுத் திட்டத்தை தமிழகம் முறியடித்துள்ளது. முதல்வரின் முயற்சியால் நம் உரிமை காக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா தோல்வி முதல்வருக்கு கிடைத்த வெற்றி, பிரதமா் மோடிக்கு கிடைத்த முதல் தோல்வி. தமிழ்நாடு தனது உரிமையை எப்போதும் விட்டுக்கொடுக்காது, தொடா்ந்து போராடும் என்றாா் அவா்.