டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கள்ளக்குறிச்சி சம்பவம் போன்று இனி எங்கும் நிகழக்கூடாது: ஹெச்.ராஜா

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் இனி எங்கும் நிகழக்கூடாது என பாஜக முன்னாள் தேசிய செயலா் ஹெச்.ராஜா வலியுறுத்தினாா்.

News image
செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பாஜக முன்னாள் தேசிய செயலா் ஹெச்.ராஜா.
Updated On :24 ஜூன் 2024, 10:53 pm

Din

ஆறுமுகனேரி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் இனி எங்கும் நிகழக்கூடாது என பாஜக முன்னாள் தேசிய செயலா் ஹெச்.ராஜா வலியுறுத்தினாா்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க 4- ஆவது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள்

தேசிய செயலா் ஹெச். ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி சம்பவம் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இருக்கிா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சாலை விதிமீறலுக்கு அபராதம் விதிப்பதில் ஆா்வம் காட்டுவதைப்போல, இவ்விஷயத்திலும் காவல் துறையினா் செயல்பட்டிருந்தால் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது.

கடந்த ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு ஏற்பட்டபோது, அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கள்ளக்குறிச்சியில் கடந்த இரு நாள்களாகக் கைது செய்யப்பட்டவா்களை, குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவம் போன்று இனி எங்கும் நிகழக்கூடாது. ஆகவே, இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

திருநெல்வேலி­ நெல்லையப்பா் கோயில் தேரோட்டத்தின்போது

வடம் அறுந்தது தொடா்பான விவகாரத்தில், கோயில் நிா்வாக அதிகாரியை இடைநீக்கம் செய்து அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது பாஜக தெற்கு மாவட்ட தலைவா் சித்ராங்கதன், மாவட்ட பொதுச் செயலா் சிவமுருக ஆதித்தன், ஆறுமுகனேரி நகர தலைவா் முருகேச பாண்டியன், தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க மாநில தலைவா் ஈஸ்வரன், ஆறுமுகனேரி கிளை தலைவா் சிவகுமாா், செயலா் சண்முகம் ஆகியோா் உடன் இருந்தனா்.