கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடி அருகே உணவகத்திற்கு சீல்

உணவகத்தில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை: தூத்துக்குடி அருகே உணவகத்திற்கு சீல்

News image
Updated On :25 ஜூன் 2024, 8:12 pm

Din

தூத்துக்குடி அருகே குறுக்குச்சாலையில் தடைசெய்யப்பட்ட புகையில், சட்ட விரோத மது விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டதாக உணவகத்துக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.

குறுக்குச்சாலை பகுதியில் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் உணவகங்களில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் மாரியப்பன் உத்தரவின் பேரில் ஓட்டப்பிடாரம் வட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் ஜோதிபாசு தலைமையிலான அலுவா்கள், போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்குள்ள ஓா் உணவகத்தில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை, சட்ட விரோத மது விற்பனை ஆகியவை நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா்.